Wednesday 21 March 2012

இலங்கைத் தீர்மானம் - இந்தியா தீர்மானம்???


இலங்கை விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்று விட்டனர். திமுக தலைவர் கருணாநிதி தீக்குளிக்கத் தேவையில்லாமல் போயிற்று. ஏதோ இலங்கைத் தமிழர் பிரச்சினையையே மன்மோகன் சிங் தீர்த்து விட்டது போன்று காட்சிப்படுத்த முயலும் காங்கிரசுக்கு இதே சூட்டில் கூடங்குளத்தையும் முடித்துக்கொண்ட சந்தோஷம்.
இலங்கையில் இதன் விளைவு எதிர்பார்த்தபடிதான் இருக்கிறது. இந்தியாவில் எப்படி நாங்கள் – அவர்கள் என்ற வாதம் ஊன்றப்பட்டு வருகிறதோ அதே போலத்தானே இருக்க முடியும் இலங்கையிலும்... இலங்கை அரசைப் பொறுத்தவரை, அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாருமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்தான். அதனால்தான் தினமும் கண்டனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. இலங்கையில் உயிர்தப்பி வாழும் தமிழர்களுக்கு இன்னும் பெரிய சிக்கல்.
உண்மையில் அந்த்த் தீர்மானம் என்னதான் சொல்கிறது, இலங்கை அரசின்மீது என்னதான் கண்டனம் செய்கிறது? இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்பவர்களும் சரி, கூடாது என்பவர்களும்சரி, பெரும்பாலோர் இந்தத் தீர்மானம் என்ன என்று முழுமையாக அறியாமல்தான் கூறிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் என் புரிதல். கூடங்குளம் விவகாரத்தில் செய்தது போல.
ஐ.நா. தீர்மானம் என்றாலே ஏதோ பெரிய தீர்மானமாகத்தான் இருக்கும்போல...! இலங்கை  அரசின்மீது கடுமையன கண்டனம் இருக்கும்போல... அதனால்தான் அப்படியே நடுங்குகிறதுபோல...!! நாளைக்கு ராஜபக்சே கைது செய்யப்பட்டு போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவார் போல... !!!
இப்படி எதுவும் அத்தீர்மானத்தில் கிடையாது என்று தெரிந்தால் எப்படி இருக்கும்... அதற்காகத்தான் இந்தப் பதிவு. நான் இதை எழுதுவதற்கு முன் கடந்த வாரம் அ. மார்க்ஸ் அவர்களின் வலைப்பக்கத்தில் இதைப் பற்றிப் படித்தேன். ஒரே ஒரு வித்தியாசம். அப்போது பிரதமரின் அறிக்கை வந்திருக்கவில்லை.
மார்க்சின் வலைப்பதிவைப் படித்தவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் அளித்த பதிலின் உண்மைப் பொருள் புரிந்திருக்கும். "தீர்மானத்தின் இறுதி வரைவு இன்னும் கிடைக்கவில்லை, இந்தியா அந்த்த் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க விருப்பமாக உள்ளது" என்றுதான் கூறியிருக்கிறார் மன்மோகன் சிங். இந்தப் பதில் தெளிவாக இல்லை என்று ஜெயல்லிதா கூறட்டும், தெளிவாக இருக்கிறது என்று கருணாநிதி கூறிக்கொள்ளட்டும். முதலில் தீர்மானம் என்ன என்று பார்ப்போம்.
Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)
Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the
International Covenants on Human Rights, and other relevant instruments,
Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,
Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,
Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,
Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,
1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the LLRC report and take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans,
2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan as expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,
3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing those steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.
தமிழில் படிக்க விரும்புவோர், அ. மார்க்ஸ் அளித்துள்ள சுட்டியில் பார்க்கவும் - ஐ.நா. தீர்மானம் (இந்தப் பக்கத்தில் மொழியாக்கம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது.)
கடைசி மூன்று பத்திகளையும் படித்துப் பார்த்தால், முதல் இரண்டும் இலங்கை அரசை வேண்டுகிற தீர்மானங்கள்தான். மூன்றாவது மட்டும்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதுவும்கூட,
மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன், இது தொடர்பாக வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை  22 வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையரை வேண்டுகிறது.
இந்த மூன்றாவது பத்தி மட்டும்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறது. அதுவும் அடுத்த அமர்வில் தான் செய்தது பற்றி மனித உரிமை ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறது. அதாவது, இப்போதைக்கு இலங்கையை கண்டிக்கும் எதுவும் இத்தீர்மானத்தில் இல்லை. 

அதைவிட விந்தையான விஷயம் என்னவென்றால், தீர்மானம் ஒருவகையில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருக்கிறது.
Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,
சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதான கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவலையுடன் கவனத்தில் கொண்டு...
என்று சுட்டுகிற தீர்மானம், அதே படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழுவின் அறிக்கையில் "கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வேண்டுகிறது", என்ன தீர்மானம் இது... அதாவது, நல்லிணக்க்க் குழு முன்வைத்த அறிக்கையின் விஷயங்கள் உள்நாட்டு விவகாரங்கள் என்று ஐ.நா. தீர்மானம் கருதுகிறதா என்ற குழப்பமும் எழுகிறது.
அதற்கு முந்தைய பத்தியில்
Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances,
என்று குறிப்பிட்டு விட்டு சில வரிகளுக்குக்கீழே LLRC report does not adequately address என்று சொன்னால் இது என்ன விளக்கெண்ணெய்வாதம்...
தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது என்று முன்னர் காங்கிரஸ் கூறியதற்கும் ஆதரிக்கும் என்று இப்போது கூறுவதற்கும் காரணம் என்ன என்பது இந்திய அரசியலின் அரிச்சுவடி அறிந்தவருக்கும் தெரிந்ததுதான்.
பெரிய அண்ணன் – நாட்டாண்மைக்காரன் - அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்தால் தமக்கு நிதியுதவி கிடைக்காதோ என்று அஞ்சுகிற நாடுகளும் உண்டு. இதையே முன்மாதிரியாக வைத்துக்கொண்டு வேறு நாடுகளின்மீதும் தீர்மானம் முன்வைக்கப்படலாம் என்று அஞ்சுகிற நாடுகளும் கட்சிகளும் உண்டு. பலூச்சிஸ்தானுக்காக பாகிஸ்தான் அஞ்சும்.  குஜராத் விவகாரத்திற்காக பாரதிய ஜனதா அஞ்சும். கஷ்மீருக்காக காங்கிரஸ் அஞ்சும்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால் பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் பக்கம். அமெரிக்கா முன்வைத்த்து என்பதாலேயே ரஷ்யாவும் கியூபாவும் இலங்கையின் பக்கம். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பக்கம். 47 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவு குறைவுதான். சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையைப் பாராட்டும் தீர்மானத்திற்கு ஆள்பிடித்ததுபோல இப்போதும் இலங்கை தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும். ஒருவேளை இந்தியாவும் மறைமுகமாக இதில் இறங்கியிருக்கலாம் – நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு – என்பது போல, சில நாடுகளை நடுநிலை வகிக்கச் சொல்லலாம்.
மன்மோகன் சிங் சொன்னது போல இது இறுதி வரைவு அல்ல. ஒருவேளை இறுதித் தீர்மானம் இன்னும் நீர்த்துப்போனதாக இருக்கலாம் – அல்லது நீர்க்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கலாம். அந்த நம்பிக்கை காரணமாகவே, தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக மன்மோகன் சிங் கூறியும் இருக்கலாம். அல்லது மாயாவதியும் முலாயமும் அரசுக்கு ஆதரவளிக்கிற தைரியத்தில் திடீரென்று மீண்டும் பல்டிஅடித்து தீர்மானத்துக்கு எதிர்ப்பும் காட்டாமல் ஆதரவும் அளிக்காமல் ஒதுங்கியும் இருக்கலாம்.
எது நடந்தாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு இப்போதைக்கு இல்லை என்பதுதான் துரதிருஷ்டம். தீர்மானம் தோல்வி கண்டால் இலங்கை அரசுக்கு தலைக்கனம் இன்னும் பலமடங்கு அதிகமாகும். வெற்றி பெற்றால் சிங்கள வெறி இன்னும் அதிகமாகும். அதை சமாளிக்க இன்னும் கடுமையான தீர்மானங்களை ஐ.நா. கொண்டுவர வேண்டியிருக்கும்.
ஞானி எழுதியிருப்பது போல,

அறிவுப்பூர்வமாக அலசி காய்களை நகர்த்தித்தீர்வுகளைத் தேடுவதே சரியான வழி 
காய்களை நகர்த்தப்போவது யார்... காய்களை நகர்த்த வேண்டிய அவசியமும் புவியியல் முக்கியத்துவமும் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டுக்கு இருக்கிறது? இந்தியா நகர்த்துமா, நகர்த்தச்செய்ய தமிழர்களால் முடியுமா?

7 comments:

  1. அணு உலை ,அணுஆயுதம் மூலம் ஆசியாவின் நாட்டாமை ஆகிவிடலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் வல்லரசு கவனிக்க தவறிய விஷயங்கள் சில
    http://saravanaganesh18.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  2. அணுஉலை,அணு ஆயுதம் மூலம் எந்த ஆபத்தும் இல்லை ,இந்தியா 2020-இல் வல்லரசாக இதெல்லாம் அவசியம் என்று கருதும் விஞ்ஞானிகள் கவனிக்க தவறிய விஷயங்கள் சில
    http://saravanaganesh18.blogspot.in/2012/03/blog-post.html

    ReplyDelete
  3. மறவன்புலவு க. சச்சிதானந்தன்22 March 2012 at 11:18

    உங்கள் கருதத்துரையைப் பலருடன் பகிர்ந்தேன்.
    18.3.12 குமுதம் ரிப்போட்டரில் இதை நான் சொன்னேன். என் மீது தமிழ்த் தேசியவாதிகள் என்போர் சினக்கிறார்கள்.

    ReplyDelete
  4. மறவன்புலவு க. சச்சிதானந்தன்22 March 2012 at 11:20

    உங்கள் கருதத்துரையைப் பலருடன் பகிர்ந்தேன்.
    18.3.12 குமுதம் ரிப்போட்டரில் இதை நான் சொன்னேன். என் மீது தமிழ்த் தேசியவாதிகள் என்போர் சினக்கிறார்கள்.

    ReplyDelete
  5. நன்றி தெறச்சி வால். நீங்கள் அளித்து சுட்டிகள் பயனுள்ளவை. உங்களைப் பற்றியும் அறிய விருப்பம்.

    ReplyDelete
  6. இந்த இணைப்பையும் படித்து பாருங்கள் புதியவன்...
    http://jayabarathan.wordpress.com/

    ReplyDelete
  7. தெறச்சி வால், ஏற்கெனவே படித்து விட்டேன். என் கேள்விக்குத்தான் அவர் பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிலுக்கு நான் பதில் கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். இது தீவிரமான பிரச்சினை என்பதால் அதிக நண்பர்களிடமிருந்து கருத்துரைகள் வருவதில்லை. நீங்களும் இந்தப் பிரச்சினையில் ஆர்வம் காட்டுவதில் திருப்தி.

    ReplyDelete