Tuesday 5 March 2013

உலகப் புத்தகத் திருவிழா 2013 - 4

புத்தகக் கலை
புத்தகத் திருவிழாவின்போது கலைப்பொருட்களை வடிவமைத்திருந்தது குறித்து முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். திருவிழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் இவற்றின் அருகே நின்று படமெடுத்துக்கொண்டார்கள். தில்லி கலைக்கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டு 7ஆம் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சில படைப்புகள் குறித்து -

பசுமைக்குளம் The Evergreen Pond
அறியாமை என்னும் சேற்றிலிருந்து அறிவென்னும் ஒளியை நோக்கி மேலெழுகிற தாமரைச்செடியின் மேல் பூத்திருக்கின்றன புத்தகங்கள். 

ஞானச் சுரங்கம் - The Wisdom Mine
தரையில் விரிக்கப்பட்டிருந்த இந்தப் பிரம்மாண்ட ஓவியத்தை சட்டென்று பார்த்தால் ஏதும் புரியாது. சற்றே தொலைவிலிருந்து பார்க்கும்போது புரியும் இது அறிவுச் சுரங்கம் என்பது. 

வாழ்வின் ஒளி - Light of Life

தாவரங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அறிவு இல்லாமல் ஞானம் இல்லை. இரண்டையும் இணைத்து அறிவென்னும் ஒளியின் பின்னணியில் செடிகளில் காய்த்திருக்கின்றன நூல்கள்.

புத்தகப் பை - School Bag
பள்ளிக் குழந்தைகள் முதுகில் பைகளைச் சுமக்கிறார்கள், மூளையில் பைகளில் உள்ள அறிவைச் சுமக்கிறார்கள். ஒரு சுமை சுமையாகத் தோன்றினாலும் அது சுமை அல்ல, எதிர்கால சுகத்துக்கான சுரங்கம். 

பளிச்சிடும் பல்பு - The Idea Bulb
எடிசனின் மூளையில் உதித்த ஒரு சிந்தனை உலகையே மாற்றியது. பளிச்சென எந்தக் கணத்திலும் தோன்றக்கூடிய சிந்தனைகள் காலத்துக்கும் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் புத்தகங்களால்தான் இது சாத்தியமும் ஆகும்.

ஈபில் கோபுரம் - Eiffel Tower
பிரான்ஸ் சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்றதற்காக வடிவமைக்கப்பட்டது இது. 

முட்டைகளும் கூடும் - The Guardian Nest
முட்டைகளை இதமாக வைக்க கூடுகட்டுகின்றன பறவைகள். முட்டைக்குள் வளர்ந்து குஞ்சுகளாக வெளிவருவது போலவே இளம் உள்ளங்கள் நூல்களின் கதகதப்பில் நல்ல குடிமக்களாக வளர்கிறார்கள்.

படைப்புக் கலைஞர்கள் - சுகந்தா கவுர், ஒருங்கிணைப்பாளர். சரோஜ் குமார் தாஸ், தல்ஜீத் சிங், ரிங்கு சவுஹான், ராகுல் கௌதம், அபிஜித் சைக்கியா.


* * *
நூல் பட்டியல்
புத்தகத் திருவிழாவிலும் அண்மைப் பயணத்தின்போது கோவையிலும் வாங்கிய நூல்கள் கலந்து விட்டன. திருவிழாவுக்கு சிலநாட்கள் முன்னதாக இமையம் வந்திருந்தபோது அவரிடம் வாங்கிய நூல்களும் சேர்த்து என் நூலகத்தின் அண்மை வரவுகள் -
  1. மண் பாரம் - சிறுகதைகள் - இமையம்
  2. ரம்பையும் நாச்சியாரும் - சிறுகதைகள் - சா. கந்தசாமி
  3. உண்மைக்கு முன்னும் பின்னும் -- நாவல் - சிவகாமி
  4. யுவான் சுவாங் இந்தியப் பயணம் - தொகுதி 2, 3 - தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்
  5. மீட்சி - சிறுகதைகள் - ஓல்கா - தெலுங்கிலிருந்து தமிழில் கௌரி கிருபானந்தன்
  6. அன்பின் வெற்றி - சிறார் கதைகள் - தொகுத்து மொழிபெயர்த்தவர் யூமா வாசுகி
  7. ரித்விக் கட்டக் - தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி
  8. பகத்சிங் சிறைக்குறிப்புகள் - தொகுத்தவர் பூபேந்திர ஹூஜா - தமிழில் சா. தேவதாஸ்
  9. வால்மார்ட்டை விரட்டி அடிப்போம் - ஆல் நார்மன் - தமிழில் ச. சுப்பாராவ்
  10. ஒரு ரூபாய் டீச்சர் - நேர்காணல்கள் - யூமா வாசுகி
  11. நிழலும் நிஜமும் - தாய்-பர்மா ரயில் பாதையும் க்வாய் நதிப் பாலமும் பற்றிய உண்மைக் கதை - சேலம் பா. அன்பரசு
  12. ஒண்டிக்காரன் பண்ணையம் - நாவல் - மா. நடராசன்
  13. சிறையிலிருந்து ஓர் இசை - இரா. நல்லகண்ணு கட்டுரைகள் - இளசை மணியன்
  14. மூங்கில் மூச்சு - நினைவலைகளின் தொகுப்பு - சுகா
  15. பெனி எனும் சிறுவன் - அல்பேனிய நாவல் - கிகோ புளூஷி - தமிழில் யூமா வாசுகி
  16. வேறிடம் - குறுநாவல்கள் - சுப்ரபாரதி மணியன்
  17. அப்பத்தாளும் ஒரு கல்யாணமும் - சிறுகதைகள் - மா. நடராசன்
  18. வீடியோ மாரியம்மன் - சிறுகதைகள் - இமையம்
  19. புகை நடுவில் - நாவல் - கிருத்திகா
  20. டினோசர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன - கட்டுரைகள் - மனுஷ்யபுத்திரன்
  21. கனவு ஆசிரியர் - கட்டுரைகள் - தொகுத்தவர் க. துளசிதாஸ்
  22. Jollyயன் வாலா Bag - ஜே.எஸ். ராகவன்
  23. Faking It - Amrita Chowdhury
  24. Bhagat Singh - Col. Raghvinder Singh
  25. Classic Ghost Stories
  26. Whatever It Takes - Lynda Page
  27. The Beginner’s Cook Book : Meat
  28. The Beginner’s Cook Book : Chicken



சக்தி ஜோதி பரிசளித்த கவிதை நூல்கள் -
  1. தீ உறங்கும் காடு
  2. கடலோடு இசைத்தல்
  3. நிலம் புகும் சொற்கள்
  4. காற்றில் மிதக்கும் நீலம்


வாசிப்பை நேசிப்போம்

No comments:

Post a Comment