Tuesday 24 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 5

புத்தகத் திருவிழா மைதானத்தில், சாலைகளில் இப்படி நிற்கிறார்கள் இளைஞர்கள். ஐஐடி-யில் படிப்பதைவிடக் குறைந்த செலவில் அமெரிக்காவில் படிக்கலாம் என்ற விளம்பரப் பலகையைப் பிடித்தபடி நின்று கொண்டே இருப்பது இந்த இளைஞனின் பணி.


குளிர் குறைந்து கொண்டிருக்கிறது. இதமானதே என்றாலும் வெயிலில் மணிக்கணக்கில் நிற்பது சாதாரண வேலையல்ல. இவனைப் பார்த்ததுமே மாணவன் என்று புரிந்தது.
முகத்தில் நேராக அடிக்கும் வெயிலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறானோ அல்லது தன் சகாக்கள் யாரேனும் பார்த்துவிடக்கூடும் என்ற கூச்சத்தில் முகத்தை மறைக்கிறானோ என்று தெரியவில்லை.
9 நாள் திருவிழாவில் குறைந்தது ஆறாயிரம், அதிகபட்சம் 10 ஆயிரம் சம்பாதித்து விட முடியும் என்ற மகிழ்ச்சி அவனுக்குள்ளும் இருக்கலாம்.


பல்வேறு பதிப்பகங்களின் விளம்பரத் துண்டறிக்கைகளை, புக் மார்க் அட்டைகளை வருகிறவர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தே இருந்தார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும். இவர்களைத் தவிர பதிப்பகப் பெயர் எழுதப்பட்ட பேனரை முதுகிலும் மார்பிலும் தொங்க விட்டவர்கள் சிலர். பொம்மை வேடம் போட்டவர்கள் சிலர். சோட்டா பீம்வேடம் போட்டுக்கொண்டு திரிந்து கொண்டிருந்தவருடன் படம் எடுத்துக்கொள்ள விரும்பியவர்கள் சிறு குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான்.
 * * *

தனிமனிதத் துதியை நான் ஒருபோதும் ரசிப்பதில்லை. இருந்தாலும், எந்தக் கவர்ச்சியுமற்ற ஓர் இளைஞனின் பின்னால் இப்படி மக்கள் திரள்கிறார்கள் என்றால், அவனிடம் ஏதோ இருக்கிறது.


ஆம் ஆத்மி கட்சி குமார் விஸ்வாஸ் இன்று புத்தகத் திருவிழாவுக்கு வந்தபோது நெருக்கிய இளைஞர் கூட்டம். அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

2 comments:

  1. பதாகைகள் சுமந்த இளைஞர்கள்......

    சோட்டா பீம்....

    முதல் நான்கு பகுதிகளில் பகிர்ந்த விஷயங்கள், என அனைத்தையும் படித்ததன் மூலம் நானும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த உணர்வு.

    ReplyDelete